tamilnadu

img

ஹிந்துமகா சபை தலைவரைக் கொலைசெய்த 2-வது மனைவி... விவாகரத்து தரமறுத்து வீம்பு பிடித்ததால் ஆத்திரம்

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில விஸ்வ ஹிந்து மகாசபை அமைப்பின் தலைவரான ரஞ்சித் பச்சன், கடந்த 2-ஆம்தேதி அதிகாலை, அவரது சகோதரருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.அப்போது, அங்குள்ள மத்தியமருந்து ஆராய்ச்சி அலுவலகக் கட்டடத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில்வந்த மர்ம நபர், துப்பாக்கியால் ரஞ் சித் பச்சனைப் பலமுறை சுட்டார். இதில், படுகாயமடைந்த ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் சகோதரர் படுகாயமடைந்தார். 

மர்ம நபர், ரஞ்சித்தின் தங்கச் செயின் மற்றும் போனைக் கொள்ளையடிக்க முயன்று பின்னர் அவரைச் சுட்டதாக காவல்துறையின் முதற் கட்ட விசாரணையில் கூறப்பட்டது. ஆனால், சங்-பரிவாரங்களைச் சேர்ந்த சிலர், வழக்கம்போல கொலைப் பழியை இஸ்லாமிய அமைப்புகள் மீது போட்டு, மதவன்முறையை ஏற் படுத்த முயன்றனர்.இந்நிலையில்தான், ரஞ்சித் பச்சன் கொலைக்கு அவரது இரண்டாவது மனைவியே காரணம் என்றுபோலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது.ரஞ்சித்தின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவஸ்தவா, அவரது காதலர் திபேந்திரா மற்றும்கொலையில் தொடர்புடைய ஜிதேந்திரா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.விஸ்வ ஹிந்து மகாசபை தலைவர் ரஞ்சித் பச்சனின் அராஜகம் தாளாமல், கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்மிருதி ஸ்ரீவஸ்தவா பிரிந்து வாழ்ந்துள்ளார். விவாகரத்தும் கேட்டு வந்துள்ளார். ஆனால் விவாகரத்து தராமல் ரஞ்சித் பச்சன் வேண்டுமென்றே வீம்பு பிடித்து வந்ததால், ஸ்மிருதி ஸ்ரீவஸ்தவா கொலை செய்யவும் துணிந்துள்ளார்.

;